திருகோணமலையில் முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டமை

திருகோணமலையில் முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டமை திருகோணமலை மூதூர் பகுதி பள்ளி குடியிருப்பைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவருக்கு கடைக்கு தேவையான ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கி அவரது வாழ்வாதாரத்திற்கு வலுச் சேர்த்து இருக்கின்றனர் ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனத்தினர். இவரது வாழ்வாதாரத்துக்கான நிதியினை லண்டனில் இருக்கும் பாபு மற்றும் மதி அவர்கள் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒரு மனிதனுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு நம்மோடு தங்கள் கரங்களை […]
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு மனிதநேயமிக்க பணிகளை ஆற்றியிருந்தோம். அந்த வகையில் கடந்த 01.09.2024 மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி பிரதேசத்திற்குட்பட்ட தேவாபுரம் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் மகத்தான பணிக்குத் தேவையான நிதி உதவியினை சுவிஸ் தேசத்தில் வாழ்கின்றதான நவநாதன் நவநீதன் அவர்கள் தனது அமரத்துவமடைந்த சகோதரன் நவநாதன் ஜசோதன் (பங்கயன்) […]
உணவுப்பொதிகளும், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டமை

வடகிழக்கு பகுதிகளில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான செயற்கைக் கால் பொருத்தும் திட்டம் அறிமுகம் வடகிழக்கில் SQM Founder இன் தரமான சம்பவம். உதயமாகிறது செயற்கை கால் உற்பத்தி நிலையம். ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள துளிர்க்கும் வாழ்வு நிலையம். ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனமானது கடந்த 9 ஆண்டுகளாக தனது உன்னதமான சேவையை மக்களுக்கு ஆற்றி வருகிறது. இந் நிறுவனத்தின் வேலைத்திட்டங்களானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு வாழ்வாதாரம் வீட்டுத்திட்டம் மற்றும் […]
முல்லைத்தீவு மாவட்ட மக்களிற்கு நிவாரண உதவி வழங்கியமை

முல்லைத்தீவு மாவட்ட மக்களிற்கு நிவாரண உதவி வழங்கியமை வணக்கம் உறவுகளே! வெள்ள அனர்த்ததால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களில் இருபது (20) குடும்பங்களுக்கு அவசர அவசரமாக “STEIN DEAR HILFER E,V” stuttgart Germanyஅமைப்பின் அனுசரனையில் ஊடாக ஜீவ ஊற்று அன்பின் கரங்களும் சேர்ந்து அவ் மக்களுக்கு நிவாரத்தினை வழங்கியது. இதற்கு நிதி உதவி வழங்கிய சிவபாலு சின்னத்தம்பி மற்றும் யோகேஸ்வரி சிவபாலு அவர்களுக்கு மக்கள் சார்பாகவும், எங்கள் நிறுவனம் சார்பாகவும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். […]
பிறந்தநாளை முன்னிட்டு உலர் உணவுப்பொதிகள் வழங்கல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை வே.பாலவினாயகமூர்த்தி மற்றும் பா.பாலயோகமணி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் வறுமை கோட்டுக்கு உட்பட்ட 20 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்கின்ற இந்த மழைக்காலத்தில் வேலை வாய்ப்புகள் இன்றி, அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் குழந்தைகளின் பசியை போக்குவதற்கும் அவதிப்படுகின்ற மக்களுக்கு இந்த உலர் உணவுப்பொதிகள் மிகவும் அத்தியாவசியமாக காணப்படுகின்றது. இக்கட்டான இந்த காலத்திலே தமது பிறந்த நாளை முன்னிட்டு எமக்கு […]
முல்லைத்தீவு மாவட்டத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை நீங்களும் எங்களோடு இணைந்து கொள்ளலாம்… இலங்கையில் இப்போது மழைக்காலம் ஆரம்பித்து விட்டிருக்கிறது. ஏற்கனவே வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு இந்த மழை காலம் அவர்களது வாழ்வாதாரத்தை பாதித்திருக்கிறது. குழந்தைகளோடு குடியிருப்பதற்கு வீடு இன்றி தவிக்கின்ற மக்கள் ஒரு புறம், அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு பசித்த வயிற்றுக்கு உணவளிக்க முடியாமல் தவிக்கின்ற மக்கள் மறுபுறம் என்று மக்கள் தற்போது அவதியுற்று வருகின்றனர். ஏற்கனவே கூலி தொழில்களையும் கட்டுமான தொழில்களையும் […]